வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 டிசம்பர், 2009

ஐ.தே.க விசேட கூட்டத்தில் சரத் பொன்சேகா முதன்முறையாக பங்கேற்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் முதன்முறையாக முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா கலந்துகொள்ளவுள்ளார்.

இக்கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டதையடுத்து ஐ.தே.கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் முதன்முறையாக அவர் உரையாற்றவுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’