வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 டிசம்பர், 2009

அம்பாறை மாவட்டத்தில் மஹிந்தவை ஆதரித்து பிரச்சாரங்கள் ஆரம்பம்.


ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரப் பணிகள் இனியபாரதி அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி அவர்களால் நேற்று காரைதீவு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வுகளில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்திருந்ததை காணமுடிந்தது.

காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளரும் அமைச்சர் முரளிதரனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி, மற்றும் பிரதேச பிரமுகர்கள் பலரும் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’