வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 நவம்பர், 2009

அம்பாறை மாவட்ட மரணித்த தோழர்களின் குடும்பத்தினருக்கு வெண்மயில் அமைப்பு உதவி.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர்களின் குடும்பத்தினருக்கு வெண்மயில் அமைப்பு நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
காரைதீவில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிமனையில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில் பங்குகொண்ட வெண்மயில் அமைப்பின் தலைவரும் ஜேர்மன் பிராந்திய ஈபிடிபி அமைப்பாளருமான மாட்டின் ஜெயா அவர்கள் மேற்படி உதவிகளை வழங்கிவைத்தார். காரைதீவு ஈபிடிபி பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா (சிவா மாமா) அவர்களும் காரைதீவு பணிமனை துணைப் பொறுப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட கட்சித் தோழர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’