
வவுனியா நலன்புரி நிலையங்களில் பெண்களின் அந்தரங்க விடயங்களை பேணிப் பாதுகாக்கக் கூடிய வசதிகள் கூட கிடையாதென்று செட்டிகுளம் அகதி முகாமிலிருந்து அண்மையில் தப்பிச்சென்ற தமிழ் அகதியொருவர் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தெரிவித்துள்ளார். வவுனியா அகதி முகாம்களில் குறிப்பாக செட்டிகுளம் அகதிமுகாம்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளைப் பிரவசிப்பதற்கு கூட மறைவிடங்கள் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல கர்ப்பணிப் பெண்கள் வெளியாட்களுக்கு மத்தியில் பகிரங்க இடத்தில் வைத்து குழந்தைகளை பிரசவிப்பதற்கு திணிக்கப் பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அகதி முகாம்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடையாது என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் பெரியளவில் இன்னல்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் மகப்பேறு சம்பந்தப்பட்ட சிகிச்சையை பெறுவதற்காக அவர்கள் முகாம்களிலுள்ள மருத்துவ நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்துநிற்க வேண்டியுள்ளது. என்றும் சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அவர் விளக்கியுள்ளார். சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கை விவகாரங்கள் குறித்த நிபுணர்களில் ஒருவரான யொலண்டா பொஸ்கெர், செட்டிகுளம் நலன்புரி நிலையத்திலிருந்து அண்மையில் தப்பிவந்த அகதிமூலம் இத்தககல்கள் சர்வதேச மன்னிப்புசபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’