வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அரசின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக ஜேவிபி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்



    அரசாங்கத்தின் ஜனநாயக அடக்கு முறைக்கு எதிராக இன்று ஜேவிபி, லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் சுயாதீன ஆணைகுழு ஒன்று நியமிக்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்காவிட்டால் தமது போராட்டம் மேலும் தொடரும் எனவும் ஜேவிபி தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’