வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
TAMILNADU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TAMILNADU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 அக்டோபர், 2009

இலங்கை துணைத் தூதர் உருவ பொம்மையை தூக்கிலிட முயற்சி : 7 பேர் கைது


இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் உருவ பொம்மையை தூக்கிலிட முயற்சி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கைப் பிரச்னை தொடர்பாக, அந் நாட்டு துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இலங்கை முள்வேலி முகாம்களில் வாழும் தமிழர்களை அடிக்கடி வந்து பார்ப்பதற்கு அது என விலங்கியல் பூங்காவா என்று கேட்டார்.

துணைத் தூதரின் பேச்சைக் கண்டித்தும், அவரை உடனடியாக இந்தியாவைவிட்டு வெளியேறக் கோரியும் தமிழ் ஆர்வர்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதற்கு போலீஸார் தடை வதித்தனர்.

ஆனால், தடையை மீறி ஈழ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் கொண்டு வந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உருவ பொம்மையை தூக்கிலிட முயன்றனர்.

ஆனால் அவர்களைத் தடுத்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்

செவ்வாய், 6 அக்டோபர், 2009

திருச்சி அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர் கொலை

Photobucket
இது குறித்துத் தெரிய வருவதாவது :

நேற்று மாலை (05) நடந்த இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த அய்யன் என்பவர் மரணமடைந்தார். இவரது மரண செய்தியைக் கேள்விப்பட்டு, வாழவந்தான்கோட்டை முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் (35) என்பவர் அங்கு வந்திருந்தார்.

அப்போது, ராஜகோபால், அவரது மகன்கள் ரபிநேசன், சசிதரன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கும், சத்யசீலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அய்யனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் சத்யசீலனுக்கும், மேற்சொன்ன நான்கு பேருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

இதன்போது சசிதரன், கத்தியால் சத்யசீலனை குத்தியுள்ளார். படுகாயமடைந்த சத்யசீலன், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் இடைவழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

திங்கள், 5 அக்டோபர், 2009

துப்பாக்கி சூட்டில் உயிரை காப்பாற்றிய ரூ. 5 நாணயம்


மும்பை: மும்பையில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவரின் உயிரை அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 5 நாணயம் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்ட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்தவர் கிருஷ்ணா ஷெட்டி. இவர் கலினா பகுதியில் புஷ்பக் பார் மற்றும் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஒரு வினோத பழக்கம் உண்டு. அது பர்ஸை சட்டை பைக்குள் வைத்து கொள்வது தான்.

அவரது குடும்பத்தினர் பல முறை இந்த பழக்கத்தை மாற்றி கொள்ள கூறியும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த பழக்கம் தான் அவரது உயிரை காப்பாற்றியுள்ளது.

நேற்று இவரும், இவருடைய பக்கத்து வீட்டுக்காரர் நிக்கோலஸ் கோம்ஸ் என்பவரும் ஒரு வீடியோ கடை வாசலில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த பக்கமாக பைக்கில் வந்த மூன்று பேர் கொள்ளையடிக்கும் நோக்கில் இவர்களை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர்.

இதில் ஒரு குண்டு கோம்ஸின் மீது பாய்ந்தது. இரண்டு குண்டுகள் கிருஷ்ணாவை நோக்கி வந்தது. அதில் ஒன்று கிருஷ்ணாவின் வயிற்றில் பாய்ந்தது. மற்றொன்று அவரது இதயத்தை நோக்கி பாய்ந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது சட்டை பையில் இருந்த பர்ஸில் விழந்தது. மேலும் அதிலிருந்த ரூ. 5 நாணயம் துப்பாக்கி குண்டை தடுத்து நிறுத்தியது.இந்த சம்பவத்தை பார்த்ததும் பொதுமக்கள் அப்பகுதியில் கூடி விட்டனர். இதையடுத்து கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். குண்டடிப்பட்ட இருவரும் பந்த்ராவில் உள்ள குரு நானாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த ரூ. 5 நாணயம் மட்டும் இல்லையென்றால் குண்டு அவரது இதயத்தை துளைத்திருக்கும். அவரை உயிருடன் பார்த்திருக்க முடியாது என்றார்.

இதை கேள்விப்பட்ட கிருஷ்ணாவின் குடும்பத்தினர் அவரை காண கூட்டமாக வந்து போவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் படித்து வரும் அவரது மகன் தந்தையையும், அவரை காப்பாற்றி நாணயத்தையும் பார்க்கும் ஆசையில் விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறேன் என்றார்

செங்கல்பட்டு முகாமில் இருக்கும் இலங்கை அகதிகளை சந்திக்க பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுப்பு

nedumaran8செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பழ.நெடுமாறன் திரும்பி சென்றார்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்கு விரைவாக முடித்து சொந்த நாட்டிற்கு அனுப்ப வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்ட அகதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

15 வது நாளாக இந்த போராட்டம் நீடிக்கிறது. ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அகதிகளை சந்திக்க சென்ற போது போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமுக்கு வந்தார். அப்போது அவரது காரை முகாமிற்கு 5 மீட்டர் தூரத்திற்கு அப்பால் போலீசார் தடுத்து நிறுத்தினர். முகாமிற்குள் செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர்.

உடனே பழ.நெடுமாறன் காரில் இருந்து இறங்கி முகாம் வாசல் வரை நடந்து சென்றார். போலீசாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அகதிகளின் நிலை குறித்து போலீசாரிடம் விசாரித்து விட்டு பழ.நெடுமாறன் புறப்பட்டார்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க : ராமதாஸ் அறிவிப்பு அக்டோபர் 04,2009,15:2

திண்டிவனம் : அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பா.மக., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற முடிவு எடுக்கப்பட்டது. இதனை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமதாஸ் நிருபர்களிடம் அறிவித்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் இன்று காலை முதலே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏராளமான தொண்டர்களும் அங்கு திரண்டிருந்தனர். கூட்டம் நடந்த அறைக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அனுமதிக்கவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ராமதாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.