வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெள்ளவத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளவத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வெள்ளவத்தை மூவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது



வெள்ளவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 28 வயதான பிரபாத் குமாரசுவாமி இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பஸ்ஸில் கொழும்பிலிருந்து குருநாகல் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 8 பிப்ரவரி, 2012

வெள்ளவத்தை தொடர்மாடியில் தீ: இருவர் உயிரிழப்பு


வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 4 ஆவது மாடியில் உள்ள வீடொன்று எரிந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்த வயோதிபர் ஒருவரும் யுவதி ஒருவரும் மீட்கப்பட்டனர். எனினும் அவர்களின் உயிரைக் காக்க முடியவில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சனி, 6 நவம்பர், 2010

கடலில் மூழ்கி இருவர் மரணம்

வெள்ளவத்தை கடலில் குளிக்கச் சென்ற ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வியாழன், 22 அக்டோபர், 2009

வெள்ளவத்தையில் கொள்ளை : சந்தேகநபர் விளக்கமறியலில்


வெள்ளவத்தையில் பெண் ஒருவரின் கைப்பையைக் கொள்ளை அடித்ததாகக் கூறப்படும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

இவர் கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதவான் ரிஷ்டன் டெலிவத்த முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர், குறித்த பெண்ணின் கைப்பையைக் கொள்ளை அடித்துச் சென்ற வேளையில், பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். குறித்த அமைச்சரினால் பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் நீதவான் அதனை மறுத்துள்ளார்