வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜனவரி, 2010

மட்டு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு?


மட்டக்களப்பு மாநகர முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னைநாள் உறுப்பினரும், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டுள்ள மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சோகவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுரத் பொன்சேகாவிடம் சிவகீதா பிரபாகரன் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றில் அவரதும் குடும்பத்தினரின் பாதுகாப்பு என பலவற்றை முன்வைத்துள்ளதாகவும் அவற்றில் கணிசமானவற்றை சரத் பொன்சேகா ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது குறித்த ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பேச்சு நடாத்தியுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளபோதும், தேர்தலில்; ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளார என்பது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. இது குறித்த மாநகர முதல்வரின் கருத்தினை பெறமுயன்றபோதும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

புதன், 30 டிசம்பர், 2009

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும்இ அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்" என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.