வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேசிய சுதந்திர முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய சுதந்திர முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 பிப்ரவரி, 2011

நாட்டில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்

லங்கையில் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய் உரைக்காது உண்மையான நிலைவரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.

வியாழன், 23 டிசம்பர், 2010

தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து அசல ஜாகொட எம்.பி. வெளியேற்றம்

மைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொட வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் விரிசல்கள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

அரசின் நடவடிக்கை அநாகரிகமானது; அரசியல் சாணக்கியமற்றது : சாடுகிறது தே.சு.மு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் இட ஒதுக்கீடு தொடர்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, அரசாங்கத்தின் நடவடிக்கை அநாகரிகமானதும் அரசியல் சாணக்கியமற்றதுமான செயற்பாடு என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தேசிய சுதந்திர முன்னணியின் குற்றச்சாட்டை அமெரிக்கா, நோர்வே தூதரங்கள் மறுப்பு


ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸாமிலுக்கு கொடுப்பதற்காக நோர்வேயும் அமெரிக்காவும் நிதி வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன.

மற்றொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதை தாம் விரும்பவில்லை நோர்வே தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில், தமது நாடு குறித்த நிதியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவும் தம்மீதான இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இலங்கையின் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் ஜனநாயகம் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், வெற்றிபெற்றவருடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.