தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டமை, அதன் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், கைது போன்ற சம்பவங்கள் அவரை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி நடவடிக்கைகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு
-













