வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பிலிப்பைன்ஸுக்கு அருகில் பூகம்பம்' ; பசுபிக் சமுத்திர நாடுகளில் சுனாமி எச்சரிக்கை



பிலிப்பைன்ஸுக்கு அருகில் சற்றுமுன் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் பசுபிக் சமுத்திர கரையோர நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதன், 11 ஏப்ரல், 2012

முதலாவது பூகம்பத்தினால் பாரிய சுனாமி அலைகள் ஏற்படவில்லை



ந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பங்களினால் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்; இலங்கையிலும் அதிர்வு உணரப்பட்டது



ந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் சற்றுமுன் 8.9 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் இந்துசமுத்திர நாடுகள் பலவற்றில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

திங்கள், 26 டிசம்பர், 2011

காத்தான்குடியில் இன்று.


2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஏழாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வெள்ளி, 11 மார்ச், 2011

ஜப்பானில் பூகம்பம்-சுனாமி: 72 பேர் பலி-தைவானையும் மினி சுனாமி தாக்கியது

ப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு 72 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

திங்கள், 28 டிசம்பர், 2009

471.9 மில்லியன் டொலர்கள் சுனாமி நிதி காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும்.


சுனாமி ஏற்பட்டு 5 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் 471.9 மில்லியன் டொலர்கள் சுனாமி நிதி காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் கோரியுள்ளது.

உடனடியாகக் கணக்காய்வுகளை மேற்கொண்டு, இந்த நிதி என்னவானது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ருக்ஷானா நாணயக்கார

“சுனாமி கட்டமைப்புகளுக்காக 2,126,771.858 டொலர்கள் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து 1,075,375,348 டொலர்கள் இலங்கைக்குக் கிடைத்தன. இதில் 603,443,908 டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் 471,931,440 டொலர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் இந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

காணாமல் போன கணக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவியபோது, அவர்கள் உரிய பதில் வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆழிப்பேரலை ஏற்பட்ட காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாரிய நிவாரண நிதிகளை அந்தக் காலக்கட்டத்தில் ஆளும் தரப்பில் இருந்தோரே ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனி, 26 டிசம்பர், 2009

ஆழிப்பேரலை ஜந்தாவது ஆண்டு நினைவு தினம்!


நாம் அனைவரும் சுனாமி பேரழிவிற்கு முகம் கொடுத்த டிசம்பர் 26ம் திகதியான இன்றைய நாளை தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தியிருப்பது பேரழிவென்ற சவாலை ஒன்றிணைத்து வெற்றிகொண்ட அனைவருக்கும் வழங்கும் கெளரவமாகவே கருதுகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எம்மை கடந்து செல்லும் 2009 ம் ஆண்டு சில அனுபவங்களையும் நினைவுகளையும் எமக்கு விட்டுச் செல்கிறது.

குறிப்பாக 30 வருடகாலமாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த பிரதானமான மானூட இடராகக் கருதப்பட்ட பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது என்பது அதில் ஒன்றாகும்.

அடுத்ததாக. இயற்கை பேரழிவுகளுக்கு இடர்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய முன் ஏற்பாடுகளை செய்யக்கூடியவர்களாக எம்மை பலப்படுத்திக் கொண்டுள்ளோம்.

இதன்படி, இடர்கள் தொடர்பாகத் தொழில்படுகின்ற சர்வதேச நிறுவனங்கள் அமைப்புகள் என்வற்றுடனான தொடர்பு களை பலப்படுத்துவதுடன் நாட்டில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடி முழு மையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளுக்கான ஒரு பலமான கட்டமைப்பு உருவாக் கப்பட்டுள்ளது. அபிவிருத்தி முன்னெடுப் புகளுடன் இடர்களை வெகுவாக குறை க்கவும் தடுக்கவும் கூடியவாறான வேலைத் திட்டங்களை ஒன்றிணைத்துக் கொண்டு மேற்கொள்ளக்கூடியவர்களாக இருப்பது நாம் பெற்றுள்ள வெற்றியாகவே கருது கிறேன்.

இடர்கள் குறிப்பாக மக்களை தெளிவு படுத்துவதும், ஆர்வம் காட்டச் செய்வதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது போன்ற குறிக்கோள்களை மையமாகக் கொண்டு நினைவு கூரப்படும் இன்றைய தேசிய பாதுகாப்பு தினம் 2004 டிசம்பர் 26ம் திகதி நாம் எதிர்கொண்ட சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய பலம் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் ஜனாதிபதி தனது செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

புதன், 2 டிசம்பர், 2009

சுனாமியின் போது காலியில் காணாமற் போன பெண் 5வருடங்களின் பின் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு!


2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது காலி ஹிக்கடுவை பெரலிய பகுதியில் வைத்து காணாமற் போன பெண்ணொருவர் ஐந்து வருடங்களின் பின்னர் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் இரத்தினபுரி பிரதேசத்தில் வைத்து இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை இரத்தினபுரி பகுதியில் வைத்து அவரது நண்பர்கள் கடந்த தினங்களுக்கு முன்னர் கண்டதையடுத்து அவரது பெற்றோர் இரத்தினபுரி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இன்றையதினம் குறித்த பெண்ணை பொலீசார் கண்டுபிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவந்தபோது பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். பொலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பெண் சுயநினைவு அற்றநிலையில் இருந்ததாகவும், பெண்ணின் காலில் இருந்த தழும்பினை வைத்து பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுனாமி அனர்த்தத்தின்போது அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்தமை மட்டுமே குறித்த பெண்ணின் நினைவில் இருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.