கடந்தகால தவறுகள் மற்றும் இன நெருக்கடிக்கு காரணமாகவிருந்த மோசமான ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒருமித்த மன் னிப்புக் கோரவேண்டும். இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. காரணம் மோசமான ஆட்சி முறைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்புக் கூறவேண்டுபும். வெறுமனே ஒரு சமூகத்தை குறைகூற முடியாது. இதனை சர்வகட்சி குழுவின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ செய்ய முடியும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என முன்னாள் அரச சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த தனபால தெரிவித்தார்.
-













