வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அநுரகுமார திஸாநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநுரகுமார திஸாநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் பீதி அவசரகால சட்டத்தை நீக்குவது அவசியம்: அநுரகுமார திசாநாயக்க

டக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வியாழன், 28 அக்டோபர், 2010

இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த அரசாங்கம் திட்டம்: ஜே.வி.பி

லங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இலவசக்கல்வியை ஒழித்து அதனைத் தனியார் மயப்படுத்தும் நோக்கத்திலேயே உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 2 மார்ச், 2010

அரசாங்கத்தின் றவுடிக் கும்பலுக்கு பயப்படுபவர்கள் நாம் அல்ல : அநுரகுமார திஸாநாயக்க


எம்மை களனிக்கு வர விடமாட்டேன் என்று சொல்வதற்கு மேர்வின் சில்வாவிற்கு உரிமையோ, தகுதியோ இல்லை எனவும், அரசாங்கத்தின றவுடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்குப் பயப்படுபவர்கள் நாம் அல்ல ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் தோன்றி ஐக்கிய தேசியக் கட்சி களனியில் பிரச்சாரம் நடத்தலாம் எனவும் ஆனால் அன்னம் கட்சியை களனிக்குள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த அநுரகுமார, அரசாங்கத்தின றவுடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்குப் பயப்படுபவர்கள் நாம் அல்ல என்றும் திட்டமிட்படி தமது தேர்தல் நடவடிக்கைகள் களனியிலும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்