வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
-















