வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 மே, 2013

இன முரண்பாடுகளை களைவதற்கு வெளிநாட்டு தலையீடு இன்றி தீர்வு காண முடியும் : ஜீ.எல்.பீரிஸ்



ன முரண்பாடுகளை களைவதற்கு வெளிநாட்டு தலையீடு இன்றி தீர்வு காண முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப உள்நாட்டு பொறிமுறைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு பாதக விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து இலங்கை தலையீடு செய்வதிலi;ல என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வது விரும்பத்தகாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’