வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 மார்ச், 2013

மட்டு. கல்லடி புதிய பாலத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி



லங்கையின் மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் 1970மில்லியன்(170 கோடி) ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மக்கள் வசம் கையளித்தார். 289மீற்றர் நீலமும் 14மீற்றர் அகலமும் கொண்ட கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக இன்று 04.30மணியளவில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொத்தலாவல, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மிக நீளமான இரும்பு பாலம் என்று அழைக்கப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது. இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாளை அம்பாறையில் இடம்பெறவுள்ளதால் பால நிர்மாண வேலைகள் துரிதமாக்கப்பட்டு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’