வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 மார்ச், 2013

சிராணி விடயம், இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது: சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்


சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமையானது, சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அத்துடன் சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது குறைக்கும் செயற்பாடாகும். இந்த சம்பவம் தொடர்பில் தமது நிறுவனம் விசாரணையை நடத்தமுயன்ற போதும் அதற்கு இலங்கை அரசாங்கம அனுமதி வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’