
முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்த போது ஆண்கள் மாத்திரமே வந்தனர். அவ்வாறு வந்த முஸ்லிம் ஆண்கள் இங்குள்ள சிங்களப் பெண்களை திருமணம் செய்தே வம்சத்தை விருத்தி செய்தனர். எனவே முஸ்லிம்கள் சிங்களவர்களின் இரத்த உறவுகள். இதனை எந்த சேனாவாலும் அழிக்க முடியாது என பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா சிங்கள பௌத்த அமைப்பல்ல. அது பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்பாகும். பௌத்த மதம் சிங்களத்துவத்துக்கு கட்டுப்பட்ட மதமல்ல என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’