வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க



க்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சருடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதான அதிகாரிகளும் இம்முறை ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஏற்படுகின்ற அனைத்து சவால்களையும் சட்டரீதியாக முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’