வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 டிசம்பர், 2012

ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சென்று பார்த்த சோனியா


டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ படிப்பு படிக்கும் 23 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் வைத்து கற்பழித்து ஒரு இடத்தில் தூக்கி வீசிச் சென்றது. இந்த கொடுமையை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் ஆண் நண்பரையும் அந்த கும்பல் இரும்புக் கம்பியால் அடித்து கீழே தூக்கி வீசியது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும், டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்துக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் நேற்று இரவு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணைப் பார்த்தார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த சோனியா டாக்டர்களை சந்தித்து அப்பெண்ணின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இது தவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’