வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 நவம்பர், 2012

ஸ்ரீரெலோ அமைப்பின் காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்


யா ழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தற்போது குறித்த அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரன் தெரிவித்தார். குறிப்பிட்ட அலுவலகம் கடந்த கிழமை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பி;டத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’