வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 செப்டம்பர், 2012

திருமணத்திற்கு புறம்பான பாலியல் உறவு குற்றச்சாட்டில் இலங்கை பெண் டுபாயில் கைது



டுபாயில் திருமண பந்தத்திற்கு புறம்பாக பாலியல் உறவுகொண்டு குழந்தையொன்றை பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணொருவர், தான் அக்குழந்தையின் தந்தையை 5 வருடங்களுக்குமுன் திருமணம் செய்துள்ளதாக டுபாய் நீதிமன்றமொன்றில் தெரிவித்துள்ளார்.
தொழில்வாய்ப்பற்ற இலங்கையரான 35 வயதான மேற்படி பெண், லத்தீபா வைத்தியசாலையில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி பெண் குழந்தையொன்றை பெற்ற பின்னர், திருமண சான்றிதழ் பிரதியை 29 வயதான தனது கணவர் சமர்ப்பித்தார். எனினும் அவர்களின் திருமண உறவை உறுதிப்படுத்துவதற்கு அது போதுமானதல்ல எனவும் மூலப்பிரதிய அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சான்றை வழங்க முடியாத நிலையில், திருமணத்திற்கு புறம்பாக பாலியல் உறவு கொண்டிருந்த குற்றச்சாட்டில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். 'இப்பெண் எனது மனைவி. எமக்கு ஒரு பிள்ளை உண்டு. இந்த பெண் குழந்தையும் என்னுடையதுதான்' என அக்குழந்தையின் தந்தை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார். தாம் திருமணம் செய்து மூன்று வருடங்களின் பின், 2010 ஆம் ஆண்டு தனது மனைவி தமது குழந்தையை இலங்கையில் விட்டுவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்ததாக அவர்கூறினார். தாம் சார்ஜாவிலுள்ள வீடொன்றில் பணியாற்றியதாகவும் ஆனால் தனக்கு சம்பளம் வழங்கப்படாததால் 6 மாதங்களின்பின் அங்கிருந்து வெளியேறியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். (த.நெஷனல்) மேற்படி ஆணும் பெண்ணும் சிறிய அறையொன்றில் வசித்தாகவும் அவர்கள் பல மீண்டும் மீண்டும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் வழக்குத்தொடுநர் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அனுசரணையாளரிடமிருந்து தலைமறைவானமை மற்றும் விஸா காலாவதியான பின் நாட்டில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அப்பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவ்விரு இவ்விடயங்களிலும் தான் குற்றவாளி என ஏற்றுக்கொண்டுள்ள அப்பெண், தனது கணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட விவகாரத்தில் குற்றவாளி அல்ல எனக் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’