வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 ஆகஸ்ட், 2012

கோமா நிலையிலிருந்த தமிழ் கைதி டில்ருக்ஷன் மரியதாஸ் உயிரிழந்தார்


வுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தின்போது தாக்கப்பட்டு கோமா நிலையில் வைத்தியசாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷன் மரியதாஸ் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் சிவில் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவத்தின் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு கைதியான நிமலரூபன் ஜூலை 4 ஆம் திகதி உயிரிழந்தபின் இரண்டாவதாக டில்ருக்ஷன் மரியதாஸ் உயிரிழந்துள்ளார். 'இக்கொலைக்கு நாம் அரசாங்கத்தை பொறுப்பாளியாக்குகிறோம்' என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’