வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஜூலை, 2012

துமிந்தவுக்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நினைவில் இல்லை: சி.ஐ.டி.



கொ லன்னாவை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு நினைவில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரில் கூறியதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் துமிந்த சில்வாவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது. தமிழ்நாடு வத்தையில் தேர்தல் வேட்பாளரொருவரிடம் பேசியது மாத்திரம் நினைவிலுள்ளதாகவும் அதன் பின் வைத்தியசாலையொன்றில் நித்திரை விட்டெழுந்ததும் நினைவிலுள்ளதெனவும் துமிந்த சில்வாவின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சத்திர சிகிச்சை நிபுணர், சில்வாவுக்கு தலையிலும் கையிலும் மேலும் 2 சத்திரசிகிச்சைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’