வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 ஜூன், 2012

நித்தியானந்தாவின் குரல், இரத்தத்தை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு



நித்தியானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அவரது இரத்தம் மற்றும் குரல் பரிசோதனை நடத்த கர்நாடக மாநில ராமநகரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற இருவட்டு வெளியீடு விவகார வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனைக்கு சமூகமளிக்குமாறு ஏற்கனேவ 6 முறை கர்நாடக இரகசிய பொலிஸார் சார்பில் நித்தியானந்தாவுக்கு மனு அனுப்பப்பட்டது. இருப்பினும் நித்தியானந்தா அந்த மனுக்களை நிராகரித்திருந்தார். இதனையடுத்து இரகசிய பொலிஸார் ராமநகரம் நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், நித்தியானந்தா இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று நீதிமன்றத் உத்தரவு பிறப்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற இருவட்டு ஒன்றை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இந்த இருவட்டினை லெனின் கருப்பன் என்கிற நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்தான் தயாரித்து வெளியிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இருவட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக இரகசிய பொலிஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்த போதே நீதிமன்றம் மேற்கண்டவாறான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’