வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 ஜூன், 2012

சட்டவிரோத இலங்கையர் குழுவொன்று நாட்டுக்குள் வருவதை தடுத்த கனடா _



மது நாட்டில் சட்ட விரோதமாக அடைக் கலம் கோரவிருந்த மற்றும் ஒரு இலங்கையர் குழுவினர் கனடாவுக்குள் வருவதை கனடா தடுத்துள்ளதாக கனேடிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
148 பேரைக் கொண்ட இந்த இலங்கையர்கள் கனடாவுக்குச் செல்லும் வழியில் அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான பெனினில் வைத்து நாட்டில் கைது செய்யப்பட்டனர். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என்று அனைவரும் உள்ளடங்கியிருந்த இந்த இலங்கையர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டன. இந்த நிலையில் இவர்களை பெனின் நாட்டில் வைத்து கைது செய்ய கனடாவின் புலனாய்வுப் பிரிவினரே முக்கிய பங்கை வகித்ததாக, அந்த நாட்டின் குடி வரவுத் துறை அமைச்சர் ஜேசன் கென்னே தெரிவித்துள்ளார். ஏற்கனவே 492 மற்றும் 76 என்ற தொகையின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்கள் கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர். இவர்களின் விடயங்களை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகின்ற நிலையிலேயே பெனினில் வைத்து 148 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பியதன் மூலம் தமது நாட்டுக்கு அவர்கள் வருவதை கனடா தடுத்துள்ளதாக கனேடிய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’