
மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை குழப்புவதற்காக யாழ்.பஸ் நிலையத்தில் கலகம் அடக்கும் பொலிஸாரை குவித்தமை, ஜனநாயக மக்கள் சார்ந்த போராட்டங்களைத் தேவையில்லாமல் தடுப்பதற்கு முயற்சிக்கின்றமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியே மேற்படி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மாவை எம்.பி குறிப்பிட்டார். முறிகண்டியில் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள காணி சுவீகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எது நடந்தாலும் எங்கள் மக்கள் சார்ந்த போராட்டம் நடைபெறும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முயடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’