வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 ஜூன், 2012

உதயநகர் அம்பாள்குளம் கிராமங்களில் மின்சாரம் கிடைக்காத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை.



கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள கிராமங்களான உதயநகர் மற்றும் அம்பாள்குளம் கிராமங்களின் பல பகுதிகளுக்கு மின்கம்பங்கள் நாட்டப்பட்ட போதும் இதுவரை மின்சாரம் வழங்கப்படாத நிலையில் அப்பிரதேச மக்கள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (13) சந்தித்து தங்களது பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அவர்களது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் உடனடியாகவே உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அடுத்துவரும் நாட்களில் மின்கம்பங்கள் நாட்டப்பட்ட பிரதேசங்களுக்கான மின்சாரம் வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மேற்படி பிரதேசங்களுக்கான மின் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மின்சார சபையினரால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உதயநகர் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது மோசமான நிலையிலுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதி ஒன்றிணையும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு அந்த அதிகாரிகளுடன் தனது அலுவலர்களையும் குறித்த வீதிக்கு நேரில் அனுப்பி பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் பணித்துள்ளார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’