வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஜூன், 2012

இளம் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது உதட்டை கடித்துத் தின்ற நபர் _



னைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரது உதட்டை கடித்துத் தின்ற கணவரை, சுவீடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தில், துணை பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் தனது முதல் மனைவியை, சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டு, இளம்பெண் ஒருவரை, கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். தன் இளம்மனைவிக்கு, மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்ட பேராசிரியர், அவரது உதட்டை கடித்துத் தின்று விட்டார். இதனால், படுகாயமடைந்த இவரின் மனைவி, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் அழகை குலைக்க வேண்டும் என்ற நோக்கில், உதட்டை கடித்துத் தின்றுள்ளதாக, பேராசிரியர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உதட்டை கடித்துத் துப்பாமல், எதற்காக அவர் தின்றார் என்பது தெரியவில்லை. தற்போது, மன நல மருத்துவர்கள், இவரது குணாதிசயங்கள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’