வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 மே, 2012

கோயில் பூசாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்


யாழ். நவாலி வடக்குப் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட கோயில் பூசாரி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உரும்பிராய் அம்மன் கோயில் பூசாரி ஸ்ரீகணேஸ் சர்மானந் (வயது 38) என்பவரே இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் பகுதியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள், தலையில் தாக்கியதாக முறையிடப்பட்டதை அடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’