வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மே, 2012

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 14 வயது சிறுமி; பொலிஸார் விசாரணை



14 வயது சிறுமியொருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த சம்பவமொன்று மாத்தளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு குழந்தைகளும் ஆண் குழுந்தைகளாகும். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கலேவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கலேவல, தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, தனது பெற்றோரின் சம்மதத்துடன் காதலருடன் குடித்தனம் நடத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’