வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 மே, 2012

லலித், குகன் வழக்கு விசாரணைக்காக இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை



யா ழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன், யாழ். அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முறைப்பாட்டாளரான முருகானந்தா ஜெனதா ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் இன்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் மா.கணேசராசாவினால் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேற்படி அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளளது. இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பான முற்னேற்ற அறிக்கைகள் கொழும்பு மேல் முறையிட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’