வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மே, 2012

பின்லேடன் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் வழங்கிய பாக். மருத்துவருக்கு 33 வருட சிறை



பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடன் தொடர்பில் அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.க்கு தகவல் வழங்கிய பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் அருகிலுள்ள அபோதாபாத்தில் பின் லேடன் மறைந்திருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்த வீட்டில் இருந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரியை பெறுவதற்காக, அப்பகுதியில் போலியான, தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமொன்றை நடத்திய டாக்டர் ஷகில் அப்ரிதிக்கே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 320,000 பாகிஸ்தான் ரூபாஅபராதமும் விதிக்கப்பட்டது. தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது பாகிஸ்தானின் வாதம். இதற்கு உதவியாக பாகிஸ்தான் மருத்துவர் இருந்தார் என்றும் நாட்டுக்கு எதிராக சதி செய்தார் என்றும் குற்றஞ்சாட்டி அவரை சிறையிலடைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஷகில் அப்ரிதியை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் பாகிஸ்தானிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம், ஒஸாமா பின் லேடன், அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’