வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஏப்ரல், 2012

போதைப்பொருள் வைத்திருந்த தாய்லாந்து பெண்கள் கைது



கொ
கேயின் போதைப் பொருளை இரு கம்பிகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கட்டாரிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு வந்த தாய்லாந்து பெண்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் இப்பெண்களில் ஒருவர் விமானத்திற்குள் மயங்கிவிழுந்தார். அவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சோதிக்கப்பட்டபோது அவரின் உடலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அப்பெண்கள் கொண்டுவந்த பைகளில் இருந்த கொகேயின் போதைப்பொருள் அடங்கிய 17 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 28 வயதான தாய்லாந்து பெண், வைத்தியசாலையில் பொலிஸ் கண்காணிப்பில் உள்ளார். 22 வயதான மற்றொரு பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’