வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 பிப்ரவரி, 2012

அவுஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் கணவன் கைது


வுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பேர்த் நகரின் சுற்றுப்புறத்தில் உள்ள பழைய வில்ரன் பகுதியில் உள்ள பழைய நேசறி லேனில் இவர்கள் வசித்த வீட்டில் இருந்து 46 வயதான பெண்ணின் சடலம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மீட்கப்பட்டது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்தே இந்தக் கொலை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 50 வயதுடைய நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட ஏற்பாடாகியிருந்தது. இலங்கையிலிருந்து இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினர். கொல்லப்பட்ட பெண்ணின் ஒரு மகள் மருத்துவக் கல்வி கற்கின்ற அதேவேளை மற்றொரு மகள் 12 வயதே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’