வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 டிசம்பர், 2011

அந்தரங்க உறுப்பில் தீ; சிறியதந்தையின் கொடுமையால் 4 வயது சிறுவன் பலி


ப்புதளை, தங்கமலை தோட்டப்பகுதியில் தனது சிறிய தந்தையால் தீக்காயத்துக்கு உட்படுத்தப்பட்ட நான்கு வயது சிறுவனொருவன் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார் என்று பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கமலை தோட்டம், க்ளனோர் பகுதியைச் சேர்ந்த எஸ்.புவனேஸ்வரன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சிறுவனது அந்தரங்க உறுப்பு உட்பட உடலின் பல இடங்களில் நெருப்பக்கொள்ளியால் இடப்பட்ட தீக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், மேற்படி சிறுவனின் தாய், 10 மற்றும் 11 வயதான இரு சகோதிரிகளும் குறித்த சிறிய தந்தையால் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து சந்தேகநபராக சிறிய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஹப்புதளை பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’