வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 நவம்பர், 2011

சர்க்கரை...சர்க்கரை...சர்க்கரை நோய்

வாப்பா பாலா, கையிலே என்ன பொட்டலம்? அட .எல்லாம் ஒனக்கு பிடிச்ச அயிட்டம் தான்பா. அட போப்பா, டாக்டர் என்ன சர்க்கரை பக்கமே போகக் கூடாதூன்னுட்டார். சரி சரி. கவலைப்படாத. சக்கரையை ஒம்பக்கம் அனுப்பிடலாம், நீ போக வேண்டாம்.

இங்க பாரு நானே நொந்து நூலாயிருக்கேன். நீ வேற நக்கல் பண்றியே.. சரிப்பா...சரிப்பா.. இனிப்புன்னு எப்படி வளைச்சு மண்டுவே. இப்ப அதெல்லாம் போச்சா. சரி. அண்ணணுக்கு ஒரு டீ வாங்கிடு வா தங்கம். சர்க்கரை இல்லாம. நமக்கெல்லாம் 4 டீ வாங்கிடு...

அண்ணே... இங்க தம் டீ தாண்ணே! சர்க்கரை போடாம கெடக்காது.
 சரி பாலா... இன்னிக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க...தம்டீ சாப்பிடு.. சரிப்பா...

 
  இப்படிப்பட்ட உரையாடல்களை எல்லாம் நாம் அனைவரும் சமீபகாலமாக அடிக்கடி கேட்க நேரிடுகிறது. இதன் காரணம்..? சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது வெகுவேகமாக... விலைவாசியைப் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. எதிர்காலத்தில், கி.பி.. 2030 களில் சர்க்கரை நோயாளிகளின் உலகத் தலைநகர் இந்தியாவாகத்தான் இருக்கப்போகிறது என அறிஞர்கள் கணிக்கின்றனர் நண்பா...! சந்தேகமே வேண்டாம்.எதில் முன்னேறுகிறோமோ இலலையோ, சர்க்கரை நோயாளிகளை உற்பத்தி செய்வதில் பயங்கரமாக முன்னேறி உயரத்தில் நிற்கிறோம்.   உலக நல நிறுவனம் (World Health Organisation)தான் இப்படி ஒரு உண்மையைப் பேசி, நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது...!
சர்க்கரையின்... நிலை....!
  
 
  கி.பி. 2000க்குள் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி; மக்கள் தொகையில் 2.8%.2003ல்-18.9 கோடி; இது கி.பி.2030ல் இருமடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது . அது போகட்டும்.. இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா? 1995ல்..1.9கோடி; 2005ல்-3.5கோடி; 2007ல்..4கோடி; 2008 ஜுன் 8ம் நாளின்படி... 4.1கோடி(உலகஅளவில் 24.0கோடி).கி.பி.2025ல், வெற்றிகரமாக 7கோடியை எட்டும் என உலக நல நிறுவனம் நிர்னயித்துள்ளது. அப்போது உலகில் இந்தியா, சீனா,அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்...!
ஏன்...சர்க்கரை நோய்...! 
    

 அதெல்லாம் சரி..! சர்க்கரை நோய் என்றால்..என்னப்பா.. என்கிறீர்களா? நாம் உட்கொள்ளும் அனைத்து உணவும், உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகிறது. உட்கிரகித்தல் மூலம் இரத்ததில் சர்க்கரையாக கலக்கிறது. ஆமப்பா;நீங்கள் இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றாலும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி...மட்டன், மீன்.. என எது போட்டு தாக்கினாலும் சரி, அது இறுதியில் சர்க்கரையாக மாற்றப்பட்டே, இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலம்தான் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேண்டிய சக்தி அளிக்கப்படுகிறது. இந்த சுழற்சியில், இரத்ததில் உடலுக்குத் தேவையானது  போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? நம் வயிற்றுப் பகுதியில் வயிற்றுக்குக் கீழே  கணையம் என்ற சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியில் ’இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது இரத்தததில் காணப்படும்  அதிகமான சர்க்கரையை, கிளைகோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பு களனாக வைத்துவிடுகிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ..நமக்கு தாங்கமுடியாத  ரோதனைதாம்பா!அதன்பெயர்தான் ...சர்கரை வியாதி..! என்ன அருமையான பேருப்பா.இது. . நாம சர்க்கரை சாப்பிட முடியாத நிலைமைக்கு இப்படி ஒரு பெயராம். ..!
சர்க்கரையின்...காரணி..!


    சர்க்கரை நோய். நமது வாழ்க்கைமுறை தொடர்பான வியாதியாகிவிட்டது இப்போது? பொதுவாக சர்க்கரை நோய் பரம்பரை நோய் என்று கூறப்பட்டாலும், பரம்பரையாக வரும் என்றாலும் இன்று அதையெல்லாம் தாண்டி குண்டாக இருப்பவர்களுக்கும் நவீன உணவு &துரித உணவு உட்கொள்பவர்களுக்கும் மற்றும் வாழ்க்கை முறையும்தான் முக்கிய காரணிகள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம முன்னெல்லாம், எல்லா இடத்துக்கும் நடந்தே போவோம். இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. இன்றைக்கு மக்களிடம் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வந்துவிட்டன. பொதுவாக இன்றைக்கு யாரும் நடப்பதே இல்லை. வாகனங்கள் நம் நடையை குறைத்துவிட்டன. நாம் நடக்க சோம்பேறிகளாகிவிட்டோம். அதுவும் கூட சர்க்கரைநோய்க்கான காரணிகளில் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லேப்பா.. இன்றைய வாழ்க்கைச் சூழல், அனைவருக்கும் எல்லா சூழலிலும் பல்வேறு வகையான மனவழுத்தங்கள், மன இறுக்கங்கள் உள்ளன. அதுவும் கூட சர்க்கரை நோய் வருவதக்கான காரணமாம்பா..! அதுமட்டுமல்ல.. நகர்மயமாதல், தொழில் மயமாதல், சமுக, பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் வழ்ல்வியல்...அவசர கதியால் செயல்படுவதால்...என  ஏராளமான உணவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்உருவான  நோய்களில் முக்கியமானது சர்கரைநோயப்பா..!
உண்ணவும்..சர்க்கரைநோயும்...! 
  
  சர்கரைநோய் பணக்காரருக்கு மட்டுமல்ல...பாட்டளிகளுக்கும் கூட வருகிறது. உணவு முறையும்.. மனவ்ழுத்தமும்தான்..இதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய உணவுபழக்கங்கள் மாறியதும், மக்கள் துரித உணவுகளை நாடுதலும், நவீனத்துக்கு தாவிவிட்டலும் கூட இதன் காரணங்கள்தான்,.இப்படிப்பட்ட  சர்க்கரை நோய் நம்மைவந்து கவ்விக்கொள்கிறது என மருத்துவர்கள் கணிக்கின்றனர். அதிகமாக குளிர்பானங்களை அருந்துபவர்களுக்கும் இந்நோய் வருகிறதாம் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11%   மக்களுக்கு சர்க்கரைநோய் உள்ளதாம். சென்னை வாழ் மக்களில் 50% பேருக்கும்,கிராமபுறங்களில் வாழ்பவர்களிடம் 30% பேருக்கு ம் சர்க்கரை வியாதியுள்ளது.
மருத்துவர்களின்...கணிப்பு...!


    நம்மை வாட்டி, வதைத்து, சித்திரவதைப் ப்டுத்தி மிரட்டும் சர்க்கரை நோய் மூன்று வகைப்பட்டது சிலருக்கு பிறவியிலேயே, இன்சுலின் சுரக்காமல் இருப்பதும் உண்டு. இவர்கட்கு குழந்தையிலிருந்தே சர்க்கரை நோய் பாதிக்கிறது. சிலருக்கு அவர்கள் உடம்பில் சுரக்கும் இன்சுலின் அளவு போதாது. இவர்களிடம் 40 வயதுக்குள் சர்க்கரைநோய் சரணடையும். இது முதல்வகைச் சர்க்கரை நோய். உடல்பருமன்,பரம்பரை,உடல்செயல்பாடு குறைதல், நகர்மயமாதலும், உணவுப்பழக்கமும்,மன அழுத்தம், போன்றவற்றால் பலர்க்கு நடுத்தர  வயதைக் கடந்தும்,சர்க்கரைநோய் குஷியுடன் உடலில் தங்கி ஓய்வெடுக்கிறது. இது இரண்டாம் வகையாகும். உலகிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 90% 
பேர் இந்த வகையினரே! முன்றாவது வகை கருவுற்றிருக்கும் பெண்களிடம் மட்டும் தாய்மை பேறு காலத்தில் எட்டிப்பார்த்துவிட்டு, பின
, பிறகு ஓடியே போய்விடும். இவர்களுக்கு முதுமையிலும், இவர்களின் குழந்தைகளுக்கும் பிற்க்காலத்தில் சர்க்கரை வியாதி வரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
உண்மை...அறியாத...மக்கள்..!   
 
 
  நம் இந்திய நாட்டில், குடிமக்களில் சுமார் 50% பேருக்கு எவ்வித மருத்துவ பரிசோதனையும் நடத்தபடுவது இல்லை...நகர்ப்புறங்களில் வழ்பவர்களுக்கும் கூட, 25% பேருக்கு சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வே இல்லை.ஆனால் இப்போது வாழும் மக்களில் அவர்கள் நினைத்தால்  40% பேருக்கு,  சர்க்கரை நோய் வராமல் தடுக்கமுடியும், அவர்க்ளும் கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது இப்போது அறியப்படுகிறது. சர்க்கரை வியாதி பற்றிய விழிப்புணர்வு,முன்பைவிட அதிகரித்திருந்தாலும், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், தொழில் முனைவோர், மருத்துவர் உட்பட, 42.6% பேருக்கு மட்டுமே இந்நோய் தடுக்ககுடியதே என்ற சரியான கணிப்பு உள்ளது. இதனால் ஏற்படும் அபாயகர விளைவுகள் பற்றிய உண்மைத் தகவல்கள் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. 1.9% பேரின், உடல்பருமன், மற்றும் உடல் செயல்பாடு குறைவால், சர்க்கரைநோய் வருகிறது எனத் தெரிந்து யவைத்துள்ளனர். சர்க்கரை நோய் வந்துள்ளவர்களில் கூட 40% பேருக்கு மட்டுமே, சர்க்கரை நோய், உடலின் மற்ற உடல் பாகங்களுக்கும், . வேறு பிரச்ச்னைகள் சர்க்கரைவியாதி மூலம் வரும் என்றே தெரிந்து வைத்துள்ளனர்.
உறுப்புகளை...சிதைக்கும்...சர்க்கரைநோய்...! 
  

  சர்க்கரை நோய் என்பது, அனைத்து நோய்களின் தாயகம்..நோய்களின்  உற்பத்திக்கூடம்.என்றே துணிவுடன் அழைக்கலாம்.  இதயம், இரத்தக்குழாய் நோய்கள்,மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, நரம்பு பாதிப்பு, கண்பார்வை பதிப்பு, ஆண்மை இன்மை ஏற்படுகிறது. விரல்கள், பாதங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. விரல்களிலுள்ள நரம்புகள் 2 சிதைந்துபோய், கான்கிரீன் ஏற்ப்பட்டு விரல்களை,கால்களை எடுத்துவிடும் நிலை ஏற்படுகிறது.
சர்க்கரையும்...பரம்பரையும்...!
  
   சர்க்கரை நோய்க்கான சிகிச்சை என்பது வாழ்நாளுடன் தொடர்புடையது. ஒருவருக்கு ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால்.. அவ்வளவுதான்..! நமது மூச்சு உள்ளவரை... நிழல்போல் தொடரும். சுறுசுறுப்பான உடல் செயல்பாடு, உடற்பயிற்சி, மற்றும் 7% எடையைக் குறைத்தல் மூலம், 58% சர்க்கரைவியாதி நம்மை அண்டாமல், தடுக்கமுடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெற்றோருக்கு சர்க்கரை நோயிருந்தால், அவர்களின் குழந்தைகளில், மகளுக்கு, 20-25 வயதுக்குப் பின்னரும், மகனுக்கு   25 வயதிலும் சர்க்கரைநோய் வர வாய்ப்பு உண்டு என அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு உடல்பருமன் இல்லை எனில், 40 வயது வரை சர்க்கரை நோய் வருவதை தள்ளிப்போடலாம்.
சர்க்கரைநோயின்...வகைகள்...!

   கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பவர்களுக்கும், துரித உணவகங்களை நாடுவோரையும், சர்க்கரைநோய் எளிதில் நாடுகிறது. இந்தியர்களுக்கு 40-45 வயதிலும், அமெரிக்கர்களுக்கு 60 வயதிற்கு மேலும் சர்க்கரை வியாதி வருகிறது. வளர்ந்த, வளர்ந்துவரும் நாடுகளில்கூட, 15 வயதிற்குட்பட்ட, சுமார் 70,000 குழந்தைகளிடம் முதல்வகை சர்க்கரைவியாதி காணப்படுகிறது. 5%  இந்தியர்கள் உடல்பருமன், நகர்மயமாக்க்கல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு அதனால் சர்க்கரை வியாதி உருவாகியுள்ளாது. , 50%பேர்கள் மிக மோசமாக சர்க்கரைவியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாளில், இருமுறைக்கு மேல் குளிர்பானம் அருந்துபவர்களுக்கும்
இரண்டாம் வகை சர்க்கரைநோய் எனப்து 20-30% உருவாகிறது. மக்களில் நிறையபேருக்கு. இரண்டாம் வகை சர்க்கரைநோய் வந்துவிட்டால்
, எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. அது  மௌன சாமியாராகவே வேடம் போட்டு உலவி வரும். .
நோய்...உருவாக்கும்...உடல்எடை...!
   

  உடல் எடை அதிகம் உள்ளவர்களில் 42% பேருக்கு சர்க்கரைநோய்... எளிதில் வந்து தஞ்சமடைகிறது. இவர்களில் 32% பேரின் இறப்புக்கு சர்க்கரைவியாதியே முக்கிய காரணியாக உள்ளது. ஏனெனில் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு, மாரடைப்பு ஏற்ப்பட்டால்,அவர்களால் வலியை உணரமுடியாது. எனவே  வலி உணராமலேயே, விரைவில் இறப்பைத் தழுவுகின்றனர். ஏனெனில் வலி.. என்ற சமய சஞ்சீவியை, நரம்பு சிதைவு மூலம், சர்க்கரைநோய் நசுக்கிவிடுவதுதான். வலி தெரியாவிடில்..எப்படி ஒருவரைக் காப்பாற்ற முடியும்; வலி இல்லாத்தால் அவரை மருத்துவரிடமும் கொண்டுசெல்ல முடியாது..! அதிக கொழுப்பு பொருள்கள் உண்பதும், மனஅழுத்தமும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாம்.
சிகிச்சையும்...சர்க்கரை நோயும்...
   
  2000ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, சர்க்கரை நோய்க்கென்ற  சிறப்புமருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சர்க்கரை நோயாளிகள் 50% க்கும்  குறைவானவர்களே! இவர்களில் 4% பேர் மட்டுமே, சரியான உணவுக்கட்டுப்பாட்டுடன் மருந்தின்  மூலம், சிகிச்சை எடுக்கின்றனர். 53.7%  மக்கள், சர்க்கரை நோய்க்காக மாத்திரை விழுங்குகின்றனர். 22%  பேர், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர்.19%  மக்கள், இன்சுலினும் போட்டுக்கொண்டு ,மாத்திரையும் உட்க்கொள்கின்றனர். இவற்றை நாம் கவனிக்கும் போது, இந்தியாவில் சர்க்கரைக்கான சிகிச்சைமுறையை சரியானபடி முடுக்கிவிட வேண்டியுள்ளது.எனப்து தெளிவாகத் தெரிகிறது.
தென்னிந்தியாவை...ஆட்டுவிக்கும்...சர்க்கரை...
     

 தென்னிந்திய மற்றும் பெங்களூரில் நடந்த சர்க்கரைநோய் பற்றிய ஆய்வுகள், நம் நெஞ்சைக் கலங்க வைக்கும் உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளன.. சர்க்கரை நோயாளிகளில் 70%, எதோ ஒரு சிகிச்சைக்காக, பொதுமருத்துவரிடம் சென்றபோது.தான் அப்போதுதான் . அவர்களிடம் உள்ள சர்க்கரைநோய். உள்ள விஷயத்தையே இவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.இவர்களில் 12 மணிநேர பட்டினி மற்றும் உணவுக்குப்பின்னும் மட்டுமே, சர்க்கரை நோய்க்கான  இதர இதர பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.. இவர்களுக்கு சர்க்கரை நோய்க்காக சிறப்பாகச் செய்யப்படும் 'Hb A1c'  என்ற சோதனை, கொழுப்பு பற்றிய சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனைகள் செய்யப்படுவது 6% மட்டுமே! இவர்களில் பெரும்பாலோர்க்கு, இரத்த அழுத்தம், எடை, கால் சோதனை கூட செய்யப்படுவதில்லை என்பது ரொம்பவும் வேதனையான விஷயம்தான். சோதனைக்கு பின்னும் கூட, இவர்களிடம் சர்க்கரைநோய் பற்றிய கண்காணிப்பு எனபது குறைவாகவே உள்ளது.
      இந்தியாவில்.. சர்க்கரை நோயாளிகள்..!
  

 இந்தியாவில் உள்ள, உடல்நல்த்திற்கான உள்கட்டமைப்பு, போதாமை, அறியாமை, சரியான வழிக்காட்டுதல் இன்மை, போன்றவையும், அதன் மேலாண்மையை கண்காணிப்பது என்பது சர்க்கரை நோயாளிகளிடமும், பொது மருத்துவர்களிடமும் உள்ள கவனக் குறைவே இதன் முதன்மைக் காரணி. நம்மிடையே இதற்க்கான சிறப்பு செவிலியர் இல்லை; சர்க்கரை நோய் மற்றும் பாதத்திற்க்கான ஆலோசகர் இல்லை. அத்துடன் சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு போதுமான ஆதரவும் இல்லை. நோயாளிகளின் திறமையின்மை, விருப்பமின்மை, பணமின்மை..அது தொடர்பான விழிப்புணர்வின்மை . யாவையுமே சிகிச்சையை தடைசெய்கின்றன.
விழிப்புணர்வற்ற... பாதை...
   
மருத்துவ சோதனைக்குபின்னும் கூட, சர்க்கரை நோயாளிகளிடம் ஏராளமான கவனக்குறைவு உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களிடம் சென்றாலும்,நோய்க்கான அறிகுறிகுறைந்து,நோய் கட்டுப்பட்டு ஒருநிலைக்கு வந்ததும், மருத்துவர்களிடம் செல்வதை நோயாளிகள் நிறுத்திவிடுகின்றனர். பெரும்பாலான நோயாளிகள், இந்திய, பாரம்பரிய, சித்த வைத்திய முறைகளை எடுக்கிறேன் என, அலோபதி மருந்தினை அம்போ என  கைவிடுகின்றனர்.சர்க்கரைநோய் அதிகரித்த்வர்க்ளில் நிறைய நோயாளிகள், இன்சுலின் போட பயந்து, அல்லது இதுவே பழக்கமாகிவிடும் எனப் பயந்து, இதனைத் தவிர்க்கின்றனர். இதனால் இவர்கள் தொடர்ந்து, மருத்துவரை மாற்றிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் சர்க்கரைநோய் முற்றுகிறது. சீக்கிரமே...அவர்களின் வாழ் நாளும் முடிந்துவிடுகின்றது, மேலும் வளமின்மை, மருத்துவ மீட்பு வசதியின்மை, மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை போன்றவையும் கூடசர்க்கரை நோய்க்கான அரசின் தரமான சிகிச்சைக்கான தடையாக உள்ளது.
கவனம்...கவனம்...கவனம்...!
     மிகக் கவனமாக இருந்தால், சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந்தால்,சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வது, உயிர் வாழ்வதற்கு உதவி செய்யும்.
     செய்யவேண்டியது: 
  • தினசரி 30 நிமிட நடை
  • 20 நிமிட உடற்ப்பயிற்சி§                                                  
  •   குறைவாக, காபி,டீ, பயன்படுத்துதல்
  • உடல் பருமனை கட்டுப்படுத்தல்.
  • குறைவான மாவுப் பொருள் புரதம் உட்கொள்ளுதல்
  • அதிக நார்ச்சத்துள்ள பொருட்களை உண்ணுதல்.Assorted healthy food.
  • எராளமான முழுத்தானியங்களை உட்க்கொள்ளுதல்
  • கால்விரல், பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல். 
  • வைட்டமின் உட்கொள்ளல்                                                                                           .
  •  
     தவிர்க்க வேண்டியவை: 
  • ஒரே இடத்தில், அமர்ந்து பணிசெய்வதை.
  •  மாவுப்பொருள், கொழுப்பு, எண்ணயில் பொறித்தவை, சிப்ஸ், கேக், ஐஸ் கிரீம், பிஸ்கட், சாக்லேட், கொட்டைபோன்றவை.
  • முட்டையின் மஞ்சள்கரு, ஆடு, மாடு முதலியவை தவிர்த்தல்.
  •  அதிக உணவை தவிர்த்தல்
  •  ஒரு நாளைக்கு 4 ஸ்பூன் எண்ணெய்க்கு 8 டம்பளர் நீர் அருந்தவேண்டும்.
  •  பட்டினிக் கிடக்க வேண்டாம்.
  • அதிக உப்பு, கருவாடு, ஊறுகாய் தவிர்க்கும்.
நம்புவதும்...நடப்பதும்...
     
   
சர்க்கரை நோயுள்ளவர்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது. எண்ணெயில் பொறித்த பொருட்கள், கொழுப்பு உண்ணலாம் என நினைக்கின்றனர். இது இரத்தத்தின் கொழுப்பை அதிகரித்து மோசமான பின் விளைவையும்,. மிகை இரத்த அழுத்தத்தையும்  உண்டு பண்ணும். இரத்தத்தில் அதிகமாக வைட்டமின் 'c' இருந்தால்தான் , இது 62% சர்க்கரை நோய் வருவதை தடைசெய்கிறது.ஏனெனில் வைட்டமின் சி என்பது தற்காப்புத்திறனை அதிகரிக்கும் முக்கிய காரணி. நீங்கள் உணவருந்த உட்கார்ந்ததும், தட்டை 4 பகுதிகளாக கற்பனைக் கோடு வரைந்து கொள்ளுங்கள். 1/4 பங்கு தானியம்/உணவு, 1/4 பங்கு புறம், 1/2 பங்கு காய்கறிகள் உணவும். சாலட், கீரை,தக்காளி, மற்றும் கொழுப்பற்ற 1 டம்ளர் மோர் அருந்தவும். இவையெல்லாம், உங்களின் சர்க்கரை நோயைக் குறைக்கும்..!
உயிர்காக்க...செய்யுங்கள்...
   
 
  சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்கள், சர்க்கரையைவிட மிக மோசமான விளைவைத்தரும் செயற்கை இனிப்புகளையும் பயன்படுத்துவது தவறு. அதை உண்பதால், நம் உடல் சீனிக்காக ஏங்கி தவம் கிடக்கிறது. தனமும் இரவு படுக்கப்போகும் முன், கால் மற்றும் பதத்தை சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும். கண்களை ஒவ்வொரு ஆண்டும் சோதனை செய்ய வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். நவம்பர்-14 உலக சர்க்கரை தினம் கடைபிடிக்கபடுகிறது. மக்களை சர்க்கரைநோய் வலையிலிருந்து காக்க நாம் உறுதி பூணுவோம்.  

































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’