வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 அக்டோபர், 2011

ரணில் போன்ற திறமைசாலி வீதிக்கு இறங்கியதால் அரசு தேர்தலில் தோற்றது: கெஹெலிய கிண்டல்


ணில் போன்ற திறமையான அரசியல்வாதி வீதிக்கு இறங்கி பொதுமக்கள் மத்தியில் பிரசாரங்களில் ஈடுபட்டதால் இம்முறை கொழும்பு மாநகரசபைத் தேர்தலின் போது அரசாங்கம் தோல்வியுற்றது என்று ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது, 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்கி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியுற்றமைக்கு காரணம் என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மேற்கண்டவாறு கிண்டலாக பதிலளித்தார். 'முச்சக்கர வண்டியில் தோட்டங்களுக்குச் சென்றும் வீதியோரக் கடைகளிலும் நின்று பிரசாரங்களில் ஈடுபட்டதனால் ஐக்கிய தேசிய கட்சி, கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்றது' எனவும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’