வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 25 அக்டோபர், 2011

18 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும்: சரத் பொன்சேகா கோரிக்கை


நாட்டின் மீது உண்மையான அன்பிருந்தால் மக்களின் மீது அக்கறையிருந்தால் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்காக நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகா அங்கு குழுமியிருந்தவர்களிடையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சர்வாதிகாரியான கேர்ணல் கடாபி கொல்லப்பட்ட விதம் தெரிந்ததே. சர்வதிகாரிகளுக்கு இது தான் நிலைமை என்பது தெரிய வேண்டும் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’