வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

மு.க.அழகிரி மனைவி காந்தி மீதும் நில அபகரிப்பு வழக்கு

தி முக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மதுரை உத்தங்குடியில் உள்ள நாகநாதர் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம், காந்தி அழகிரி தன் பெயருக்கு பதிவு செய்து கொண்டார் என்றும், இந்த இடம் 1500 வருடங்களுக்கு முன்பு நாகநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்றும், அந்த கோயிலின் டிரஸ்டி சார்பில் மதுரை எஸ்.பியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
மேலும், அந்த இடத்தை சுப்பிரமணியன் என்பவருக்கு காந்தி அழகிரி தற்போது பவர் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்த மதுரை எஸ்.பி. உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் முடிவில், இந்த குற்றச்சாட்டு புகார் மீது அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று கூறி அழகிரியின் மனைவி காந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கணவருடன் டெல்லியில் காந்தி முகாம்:

நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று அழகிரி டெல்லி சென்றபோது காந்தியும் உடன் சென்றார். அவர் டெல்லியில் உள்ள நிலையில் இந்த வழக்குப் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கில் காந்தி அழகிரி கைது செய்யப்படலாம் என்ற செய்தி பரவி வருவதால் மதுரையில் பதட்டம் நிலவுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’