வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

பிடிபட்டதாக கூறப்பட்ட கடாஃபி மகன் பிபிசிக்கு பேட்டி

லிபியாவில் கர்ணல் கடாஃபியின் மகனும் கடாஃபிக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை ஏற்கும் நிலையில் இருந்தவரும் ஆன சயீஃப் அல் இஸ்லாம் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், திங்கள் இரவு அவர் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியுள்ளார். விடுதிக்கு வந்தார்
"கிளர்ச்சிக்காரர்களை வெளியே போக முடியாமல் வலையில் சிக்க வைத்து தற்போது அவர்கள் முதுகெலும்பை முறித்து விட்டோம்." ஆனால் திரிபோலியில் செய்தியாளர்கள் பயன்படுத்தும் விடுதி ஒன்றிற்கு வந்து நம்பிக்க கொப்பளிக்க பிபிசியிடம் பேசிய சயீஃப் அல் இஸ்லாம், நகருக்குள் முன்னேறிவந்த கிளர்ச்சிப் படைகளை தற்போது தாங்கள் திருப்பித் தாக்குவதாகக் கூறினார். "அவர்களை வெளியே போக முடியாமல் வலையில் சிக்க வைத்து தற்போது அவர்கள் முதுகெலும்பை முறித்து விட்டோம்." என்று அவர் தெரிவித்தார். கர்ணல் கடாஃபியும் திரிபோலிக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார். பொதுமக்கள் முன் தோன்றிய கடாபியின் மகன் கிளர்ச்சிப்படிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட கடாபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் திரிபோலியில் தோன்றினார். ஒலிக்குறிப்பு. இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும் பிடிபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட கடாஃபியின் இன்னொரு மகனான முகம்மதும் தப்பிச் சென்று விட்டதாக இப்போது தெரிவிக்கப்படுகிறது. சண்டைகள் நீடிக்கின்றன இதனிடையே திரிபோலி நகரில் கடாஃபியின் தலைமையகம் அமைந்துள்ள பாப் அல் அஸீஸியாவிற்கு அருகில் பல இடங்களில் சண்டைகள் நடந்துவருகின்றன. இப்பகுதியில் ரொக்கெட் வீச்சின் நெருப்பும் புகையும் கிளம்புவதை காணக்கூடியதாக உள்ளது. நகரின் மற்ற பகுதிகள், சென்ற வாரக் கடைசியில் இங்கு நுழைந்த கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. கடாஃபியின் படையினர் மிஸ்ராதா நகருக்குள் மூன்று ஸ்கட் ஏவுகணைகளை வீசியுள்ளதாக நேட்டோ சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’