வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

நயன்தாராவின் மதமாற்றம் நிர்ப்பந்திக்கப்பட்டதா? : கண்டனம் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்பு



யன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளதாக கூறி பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது

கிறிஸ்தவ அமைப்பு. டயானா மரியம் குரியன் என்ற தனது இயற்பெரை சிநமாவுக்காக நயன்தாரா என்று மாற்றி வைத்தார் நயன்தாரா. ஆனால் தற்போத மதமாற்றம் காரணமாக தனது சினிமா பெயரையே தனது பெயாக வைத்துள்ளார் நயன்தாரா. இந்த மாற்றத்திற்கு காரணம் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலே. பிரபுதேவா ஏற்கனவே ரம்லத் என்ற பெண்ணை திருமணம் முடித்து 3 பிள்ளைகளும் பிறந்தது. பின்னர் இவரின் முதல் மகனும் இறந்துவிட்டார். இந்நிலையில், பிரபுதேவாவுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்பட்டது. தற்போது இருவரும் திருமணம் முடிக்கவுள்ளனர். இதற்காக பிரபுதேவா தனது முதல் மனைவியான ரம்லத் என்பவரை விவாகரத்து செய்தார். ரம்லத் முஸ்லிமாக இருந்து பின்னர் பிரபுதேவாவை மணம்முடிப்பதற்காக இந்து மதத்தை தழுவினார். தற்போது பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. நயன்தாரா மதம் மாறிய தகவல் அவரது சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதுடன் அங்கு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது அத்துடன் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும்இ ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன் ஜான் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர். உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. பைபிளின் சாபம்இ ரம்லத்தின் வேதனைஇ ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவாவும் குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்இ' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’