வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஜூலை, 2011

பெண்களின் உள்ளாடைகளை திருடி தான் அணிந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பெண்களின் உள்ளாடைகளை திருடி, அதனை அணிந்துக் கொண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்த மர்மமனிதர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கண்டி அலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிர் தெரிவருவதாவது, கண்டி அலவத்துகொடைப் பொலிஸ் பிரிவில் உள்ள பெண்கள் மாத்திரம் வசிக்கும் வீடுகளுக்குள் பிரவேசித்து அவர்களுடைய உள்ளாடைகளை திருடி அதனை அணிந்து கொண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்கடந்த சில தினங்களாக அலவத்துகொடை பொலிஸாருக்கு இம் மர்ம மனிதர் தொடர்பாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இது சம்பந்தமாக தீவிர விசாரணையை நடாத்திய பொலிஸார் நேற்று மாலை அலவத்துகொடை சய்ன்ஸ்டன் பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யும் போது சந்தேக நபர் பெண்களின் உள்ளாடைகள் பலவற்றை அணிந்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நபர் சம்பந்தமாக மேலதிக விசாரனைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டடியாரச்சி தெரிவித்தார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’