வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 ஜூன், 2011

போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உரிய விசாரணை நடாத்தாவிடின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரவில்லை. பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை பொறுப்பு உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்ளது என அத்திணைக்களம் கூறியுள்ளது.

நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நிலையில் இக்கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக தனது ஆற்றலை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் தாமாகவே இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அதை செய்யாவிட்டால் வேறு தெரிவுகளை ஆராய்வதற்கான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கலாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய இலங்கை தொடர்பான ஆவணப்படத்தை தொடர்ந்து இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. கைதிகள் கொல்லப்படுதல், பாலியல் வன்முறைக்குள்ளானதாக கருதத் தோன்றும் பெண் போராளிகளின் உடல்கள் அதில் காணப்பட்டன.
யுத்தத்தின் கடைசி மாதங்களில் சுமார் 7000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சரணடைய முற்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலங்கை படையினர் கொலை செய்ததாக ஐ.நா.அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு ஆரம்பமான பிரிவிணைப் போரில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’