வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 மே, 2011

புலி சந்தேக நபர் கொச்சி விமானநிலையத்தில் கைது

போ லி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த புலி சந்தேக நபரை, பொலிசார் நேற்று முன்தினம் இரவு கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்த ஜீவதாஸ்(34) என்பவர், கேரள மாநிலம் கொச்சி (நெடும்பாசேரி) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ஓமன் விமான நிறுவனத்தின் விமானம் மூலம், பாரீசுக்கு செல்ல முயன்றார்.
விமான நிலைய அதிகாரிகள், அவருடைய கடவுச்சீட்டை ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கடவுச்சீட் 2007இல் திருச்சி கடவுச்சீட்டு அலுவலகத்தில், முத்து பீட்டர் என்ற பெயருக்கு வழங்கப்பட்டிருந்தது.
2003இல், ஜீவதாஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’