வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 மே, 2011

ரணில் உட்பட 75 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

திர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 75 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்கவை ரணில் விக்கிரமசிங்க நியமித்தமையானது கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும் குறித்த நியமனத்தை ரத்து செய்யுமாறு கோரியும் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே கங்கொடவில மாவட்ட நீதவான் சம்ப ஜானகி விஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகி குறித்த நியமனம் குறித்து காரணங்களை தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’