வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

இலங்கையின் யுத்தக் குற்ற பயங்கர வீடியோக்களை வெளியிட சனல் 4 தயார்

லங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான புலனாய்வில் இதுவரையில் காட்டப்பட்டவற்றைவிட மிக மிகப் பயங்கரமான வீடியோக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக ஐக்கிய இராச்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2009ஆம் ஆண்டு நடைடிபெற்ற யுத்தத்தின் இறுதி வாரங்களில் இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்வது பற்றி பான் கீ மூன் அறிவித்ததற்கு அடுத்த நாள் சனல் 4 இந்த அறிவிதலை விடுத்துள்ளது. இதன்மூலம் நடந்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் படு பயங்கரமானவை என்பதால் இவை பின் இரவிலேயே ஒளிபரப்பப்படும். படு பயங்கரமான காட்சிகள் காட்டப்படுமுன் உரிய எச்சரிக்கை வழங்கப்படும் என சனல் 4 அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’