வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

த.தே.கூ. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்; சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு

மிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதன் காரணமாகவே குறித்த சத்திய பிரமான நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நாடு திரும்பிய பின்னரே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் செய்யும் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலை நகரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருந்தமையால் கடந்த பல மாதங்களாக அவர் இந்தியாவில் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’