வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 மார்ச், 2011

நுவரெலியாவில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: நான்கு பெண்கள் உட்பட அறுவர் கைது

நுவரெலியா அப்பர் லேக் பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்றினை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கிருந்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த விபசார விடுதியினை நடத்தி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு ஆண்களையும் அவ்விடுதியிலிருந்த நான்கு பெண்களையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
குறித்த சட்டவிரோத செயல் தொடர்பாக குற்றப் புலனாய்வினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நுவரெலிய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மதுரடவின் பணிப்புரைக்கமையவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய, நிகவரெட்டிய மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதிற்கும் 26 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தி வரும் குற்றப் புலனாய்வினர் இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’