வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மார்ச், 2011

ஆயுத குழு-பொலிஸார் மோதல்;ஒருவர் பலி

பிபிலை, மெதகம பிரதேசத்தில் ஆயுத குழுவொன்றுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

கெந்தவின்ன பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று நடமாடுவதாக 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த பிரதேசததிற்கு கு இரு பொலிஸ் ஜீப் வண்டிகள் விரைந்துள்ளன.
அதன்போது மறைந்து இருந்த ஆயுதக்குழு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பொலிஸார் திருப்பி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் எனவும் இவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’