வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

தென்கொரிய கப்பல் தடுத்துவைப்பு

தென்கொரிய வணிகக் கப்பலிலிருந்து அக்கப்பலின் இரண்டாவது பொறியியலாளர் இலங்கை கடலில் விழுந்ததைத் தொடர்ந்து அக்கப்பலை இலங்கைக் கரையிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் வைத்து இலங்கை கடற்படை நேற்று வியாழக்கிழமை மாலை கைப்பற்றியதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கோவா நோக்கி சென்று கொண்டிருந்த இக்கப்பல், மூன்று கடற்படை படகுகளால் மறிக்கப்பட்டு இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை முடியும் வரை கப்பல் தடுத்து வைத்திருக்கப்படுமென கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய கூறினார்.
கடலில் விழுந்த ரஷ்ய கப்பல் ஊழியரொருவர் எண்ணெய் படததால் காப்பற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’